கடவுச்சீட்டு விண்ணப்பித்தல் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடவுச்சீட்டு விண்ணப்பித்தல் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

கணனி அமைப்பில் அவசர திருத்தப்பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கடவுச்சீட்டுகளை வழங்குவது தொடர்பான அறிவிப்பை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ளது.

கடவுச்சீட்டு வழங்கல் (ஒரு நாள் சேவை தவிர்த்து) இன்று (09) முதல் வழமையான சேவைகள் ஆரம்பிக்கப்படும்.
இதன்படி, சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு பெறுவதற்கு மே 5, 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் நேரம் ஒதுக்கி மே 5 ஆம் திகதி சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்து திணைக்களத்திலிருந்து ஒரு எண் அல்லது முத்திரையினை  பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரம் இன்று விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மே 10 முதல், உங்கள் கடவுச்சீட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்வது கட்டாயமாகும். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.