எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர்!

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhon மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (11) காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

இதன்போது இலங்கை தற்போது எதிர்கொள்ளும் நிலைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, இந்தப்பேரழிவு தருணத்தில் இலங்கைக்கு சகோதரத்துவத்தின் பிரகாரம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சீனத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.

வெளிப்படைத்தன்மையுடன் நாட்டை ஆட்சி செய்தல்,இலஞ்சம்,ஊழல் மற்றும் அடக்குமுறைகள் ஒழிப்பு என்பனவே தனது நிர்வாகத்தில் முதன்மையான அம்சமாக இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்தார்.

இலங்கையை தற்போதைய நிலையில் இருந்து மீட்கும் முகமாக சீனாவின் பெருந்தன்மையான ஆதரவு மிகவும் அவசியமானது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பில் தலையிடுமாறும் தூதுவரிடம் அவர் கோரிக்கையும் விடுத்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் கலந்து கொண்டார்.

🔵 நமது Telegram குழுமத்தில் இணைய கீழே உள்ள Link இனை Click செய்யவும்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.