
இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகள், உணவு மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு சீன அரசாங்கம் 300 மில்லியன் யுவான் கடனுதவியாக வழங்கவுள்ளதாக சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி, சீன அரசு வழங்கும் அவசர நிதி உதவித் தொகை 500 மில்லியன் சீன யுவானாக அதிகரித்துள்ளது, அதாவது 76 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். (யாழ் நியூஸ்)