இலங்கைக்கு சீனாவின் 300 மில்லியன் யுவான் இதயபூர்வமான உதவி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கைக்கு சீனாவின் 300 மில்லியன் யுவான் இதயபூர்வமான உதவி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக 300 மில்லியன் யுவான் கடனாக வழங்க இலங்கைக்கான சீன தூதரகம் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகள், உணவு மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு சீன அரசாங்கம் 300 மில்லியன் யுவான் கடனுதவியாக வழங்கவுள்ளதாக சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி, சீன அரசு வழங்கும் அவசர நிதி உதவித் தொகை 500 மில்லியன் சீன யுவானாக அதிகரித்துள்ளது, அதாவது 76 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.