குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட பண கொடுப்பனவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட பண கொடுப்பனவு!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்கு விசேட பண கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

நிதியமைச்சர் கௌரவ அலி சப்ரி மற்றும் வர்த்தக மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சமுர்த்தி, முதியோர், சிறுநீரகம் மற்றும் ஊனமுற்றோர் கொடுப்பனவுகள், பெறும் குடும்பங்கள் மற்றும் காத்திருப்பு கொடுப்பனவில் உள்ள குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதுடன், உலக வங்கி குழுவின் நிதியுதவி திட்டங்களின் கணிக்க முடியாத அவசரகால பதில் கூறுகள் மூலம் இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.