இடைக்கால அரசின் பிரதமர் இவர் தான் - பசில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இடைக்கால அரசின் பிரதமர் இவர் தான் - பசில்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் சுயேச்சை உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச மகாநாயக்கர்கள் மற்றும் மதத் தலைவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அந்த முடிவை எடுப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு நடந்தால், புதிய அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் மஹிந்த ராஜபக்ச இன்னும் சிறிது காலத்திற்கு முன்னிறுத்தப்படுவார் எனவும், வேறு எவரும் முன்னிறுத்தப்பட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவே அடுத்த பிரதமராக வருவார் என்பதால் மக்கள் தெரிவை தவிர வேறு யாரையும் முன்னிறுத்த கட்சி தயாராக இல்லை என்றும் அவர் தேர்தலில் மக்களிடம் கூறியுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.