நாட்டுக்காகவே மஹிந்தவை நீக்கினேன்! ஆனால் 21 ஆவது திருத்தம் எனது சம்மதத்துடன் கொண்டுவரப்படும்! -ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டுக்காகவே மஹிந்தவை நீக்கினேன்! ஆனால் 21 ஆவது திருத்தம் எனது சம்மதத்துடன் கொண்டுவரப்படும்! -ஜனாதிபதி


மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்கு தனது அரசியல் வாழ்க்கையில் எடுக்கப்பட்ட மிகவும் கடினமான தீர்மானம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டிற்காக அந்த கடினமான முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். 

ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தனது விருப்பத்தின் பேரில் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் நாட்டின் எதிர்காலத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

மேலும் ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைத்து புதிய பிரதமராக நியமித்ததாகவும், அந்த நம்பிக்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.