எதிர்வரும் தினங்களில் மின்வெட்டு எவ்வாறு அமையும்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் தினங்களில் மின்வெட்டு எவ்வாறு அமையும்?


எதிர்வரும் ஜூன் 02ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜூன் 02ஆம் திகதியும் 03ஆம் திகதியும் 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு இடம்பெறுவதுடன், ஜூன் 04ஆம் திகதி ஒரு மணித்தியாலம் மின்வெட்டு இடம்பெறும்.

எனினும், ஜூன் 05ஆம் திகதி மின்வெட்டு இடம்பெறாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் பட்சத்தில், இரவு நேர மின்வெட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 01 மணித்தியால மின்வெட்டு மற்றும் மாலை 6.00 மணிக்குப் பின்னர் இரவு 01 மணித்தியால மின்வெட்டுடன் 02 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், எரிபொருள் தட்டுப்பாடு,  நீர் சேமிப்பு மற்றும் மின் உற்பத்தியாக்கிகள் கிடைக்காமை போன்றவற்றின் விளைவாக போதிய உற்பத்தியின்மை காரணமாக இவ்வாறான மின்வெட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.