CEYPETCO எ‌ரிபொரு‌ள் விலைகளும் அதிகரிப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CEYPETCO எ‌ரிபொரு‌ள் விலைகளும் அதிகரிப்பு!!


இன்று (18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மீண்டும் உயர்த்தியுள்ளது. 

புதிய லிட்டர் ஒன்றின் விலைகள் பின்வருமாறு, 

பெற்றோல்
ஒக்டேன் 92: ரூ. 254 இருந்து ரூ. 338 (ரூ. 84 ஆல்)
ஒக்டேன் 95: ரூ. 283 இருந்து ரூ. 373 (ரூ. 90 ஆல்)

டீசல்
ஒட்டோ டீசல்: ரூ. 176 இருந்து ரூ. 289 (ரூ. 113 ஆல்)
சுப்பர் டீசல்: ரூ. 254 இருந்து ரூ. 329 (ரூ. 75 ஆல்)

அதேநேரம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏப்ரல் 15 ஆம் திகதி விதிக்கப்பட்ட எரிபொருள் விநியோக வரம்பை நீக்கியுள்ளது. 

அதன்படி மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வேன்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரம்பு இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.