![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjP5nLQbr2Z-SYStOb9cCVa5Lehd9cAdMwLRyiTabaKBbLnuQWBqoAoVX0D8MLwQ0WfwCFgccBwXa3EVn-fAZLnltsu_pqTiBmvrT4ZA47C7cW4maBlCeWm6fBLEvnY7xYMedVyYp28_-o/s16000/1650316374925880-0.png)
புதிய முகங்கள் பலரைக் கொண்ட அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்து இந்தக் கூட்டத்தில் பிரேரணையை சமர்ப்பித்துள்ள போதிலும், அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும் ஜனாதிபதியின் யோசனைகள் நிறைவேற்றப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
புதிய நியமனங்களை வழங்குவதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட நான்கு அமைச்சரவை அமைச்சர்களையும் இராஜினாமா செய்ய ஜனாதிபதி முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அமைச்சரவை அமைச்சர் பதவியில் இருந்து தற்போதைக்கு இராஜினாமா செய்யத் தயாரில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவ்வாறு நடந்தால் தனக்கும் தனது குழுவினருக்கும் எதிர்க்கட்சியில் அமருவதைத் தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)
எமது வாட்சப் குழுமத்தில் இணைந்து கொள்ளவும்.