இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் தரமற்றதா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் தரமற்றதா?

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன (CPC)  களஞ்சியசாலைகளில் இருந்து வெளியிடப்படும் எரிபொருள் தேவையான தரத்தில் இருப்பதாக CPC ஆய்வக முகாமையாளர் நளின் சந்திரசிறி தெரிவித்தார்.

தரமற்ற எரிபொருள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் தாங்கிகளின் எண்ணெய் மாதிரிகள் நான்கு தடவைகள் பரிசோதிக்கப்படுவதாகவும், இந்தப் பரிசோதனைகள் ஒரு ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு கப்பலில் உள்ள எரிபொருள் தரமற்றது என கண்டறியப்பட்டால் அவ்வாறான எரிபொருள் இருப்புக்களை நிராகரிப்பதற்கு கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.