
தரமற்ற எரிபொருள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் தாங்கிகளின் எண்ணெய் மாதிரிகள் நான்கு தடவைகள் பரிசோதிக்கப்படுவதாகவும், இந்தப் பரிசோதனைகள் ஒரு ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு கப்பலில் உள்ள எரிபொருள் தரமற்றது என கண்டறியப்பட்டால் அவ்வாறான எரிபொருள் இருப்புக்களை நிராகரிப்பதற்கு கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)