![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiG1bHOreQh4ozlO_8RT1EGrRDWj_h_YnPswgACBBKAsxDpvqX1ykd63DxbhBG46s36kmGF-bluPBnswuArXzkeae8nTWRsawH7X66hcyNuFY_cupnv26wKIW66MA8gRp4znGynuz0pPc_VIYqUT3G43wwrveI09XhbiHdYTqMASnRFN8dFAibwXpEwWA/s16000/9F5540E0-A38F-401F-BD33-40B143A6D04E.jpeg)
அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து அளுத்கம பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
முச்சக்கரவண்டிகள் நிறுத்தப்பட்டிருந்த வளாகத்திற்குள் நுழைந்த சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் இருந்த எரிபொருளை திருடி, முச்சக்கரவண்டியின் பூட்டை உடைத்து சிறிய தொகையான பணத்தை (கேபி ஹால்) திருடிச் சென்றுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ஏஎஸ்பி) தெரிவித்தார். .சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் மற்றுமொரு முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் 11ஆம் திகதி களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
களுத்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிறிமதாச மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் துமிந்த ராஜபக்ஷ ஆகியோரின் பணிப்புரையின் பேரில் அளுத்கம பொலிஸ் அதிகாரிகள் குழு சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. (யாழ் நியூஸ்)
களுத்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிறிமதாச மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் துமிந்த ராஜபக்ஷ ஆகியோரின் பணிப்புரையின் பேரில் அளுத்கம பொலிஸ் அதிகாரிகள் குழு சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. (யாழ் நியூஸ்)