நாட்டில் நாம் செய்த தவறு இது தான் - நிதி அமைச்சர் அலி சப்ரி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் நாம் செய்த தவறு இது தான் - நிதி அமைச்சர் அலி சப்ரி

புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வரிச்சலுகைகளை வழங்குவதும், ரூபாயை தேவையில்லாமல் கட்டுப்படுத்தியதும் பாரிய தவறான முடிவாகும் என நிதியமைச்சர் அலி சப்ரி நேற்று (25) இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 10,000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு மாதாந்தம் சுமார் 18 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாகவும், ஆனால் அந்த தொகை எவ்வாறு பெறப்படும் என்பது யாருக்கும் தெரியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று இரவு நடைபெற்றது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.