நள்ளிரவு வரை நீடித்த ராஜபக்ச குடும்ப அங்கத்தவர்களின் நாட்டில் பொருளாதார நெருக்கடி தொடர்பிலான விசேட கலந்துரையாடல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நள்ளிரவு வரை நீடித்த ராஜபக்ச குடும்ப அங்கத்தவர்களின் நாட்டில் பொருளாதார நெருக்கடி தொடர்பிலான விசேட கலந்துரையாடல்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று (25) இரவு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடல் நேற்று நள்ளிரவு வரை நீடித்ததாக தெரியவருகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.