ராஜபக்ச குடும்பத்தில் சண்டையும் அதிகாரப் போட்டியும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ராஜபக்ச குடும்பத்தில் சண்டையும் அதிகாரப் போட்டியும்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி சங்கப் பேரவையொன்றை வெளியிடுவதற்கு சங்க மாநாடு ஒன்று கூட்டப்படும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரம் இதில் பங்கேற்க மறுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மகாநாயக்கர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் ஆலோசனையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாகவும், பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும் சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று ராஜபக்ச குடும்பத்தில் சண்டையும் அதிகாரப் போட்டியும் நிலவுவதாக அவர் கூறினார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.