பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

பிரதமர் பதவியில் இருந்து கண்ணியத்துடன் இராஜினாமா செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக நீக்கும் வரை காத்திருக்காமல் கண்ணியத்துடன் பதவி விலகுமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவர் தொடர்ந்தும் பதவியில் இருந்தால் நம்பிக்கையில்லா பிரேரணையை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் என அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்குவது அவருக்கு ஏற்புடையதல்ல எனவும் அதற்கு முன்னர் பதவி விலகுமாறு பணிவுடன் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.