தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 17 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 17 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 23.3 கிலோமீற்றர் களுத்துறை பிரதேசத்தில் 17 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இரு பெண்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான வாகனங்களில் சொகுசு கார்கள், வேன்கள் மற்றும் லொறிகள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து காரணமாக கொழும்பு செல்லும் வீதியில் பல கிலோமீற்றர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், சில மணித்தியாலங்களில் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து வழமைக்குத் திரும்பியதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னால் பயணித்த வேன் ஒன்று பிரேக் போட்டதாலும், பின்னால் வந்த மற்ற வாகனங்களும் அவ்வாறே பிரேக் போட்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.