![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYreE8lcJaI_7XBd7tRyFUO8TK-dPOJA1S0sa8GnDjWNMpoiRr-7HIZpp0MtWUO25bwyrVKdET_wWvdm55vWyfbt5TctkMqU8-IQdqRW5_rtUPReM6l4Ab2Uy5h_Z2_lPbn4ztDTbjTKA/s16000/1650252532670620-0.png)
அமைச்சரவையில் சுமார் 20 பேர் இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 03ஆம் திகதி இரவு முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்தது. எனினும், மறுநாள் நிதி, வெளிவிவகார, கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி நியமித்து பாராளுமன்றம் மற்றும் அரசாங்கத்தின் பணிகளை வழமைபோல் முன்னெடுத்தார்.
புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளடங்குவதுடன், ஏனையவர்கள் இளம் எம்.பி.க்கள் என்று கூறப்படுகிறது.