VIDEO: இந்தியாவிடம் கடனுதவி பெற்றது இவ்வாறு தான் - நிதி அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: இந்தியாவிடம் கடனுதவி பெற்றது இவ்வாறு தான் - நிதி அமைச்சர்!

பொருளாதார ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விவசாய சமூகத்திற்கு தேவையான நனோ உரங்களை கையிருப்பில் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஒரு பில்லியன் டொலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், அது நேற்று (17) முதல் செயற்படுவதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடனை வழங்குவதற்கு எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை எனவும் மூன்று வருடங்களின் பின்னர் கடன் தவணைகள் மீளச் செலுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.