பொருளாதார நெருக்கடி - பாடசாலை பரீட்சைகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொருளாதார நெருக்கடி - பாடசாலை பரீட்சைகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

பாடசாலைகளின் இறுதித் தவணைப் பரீட்சைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாண மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

அதன்படி, 6, 7, 8ஆம் வகுப்புகளுக்கான தவணைப் பரீட்சைகள் பாடசாலை அளவில் நடத்தப்பட உள்ளன.

இதேவேளை, தரம் 09, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

காகிதத்தாள் தட்டுப்பாடு காரணமாக இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கான காகிதத்தாள் தட்டுப்பாடு காரணமாக மேல் மாகாண பாடசாலைகளின் இறுதித் தவணைப் பரீட்சைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.