"வெட கரன அபே விருவா" பாடல்: சமூக ஊடக அறிக்கைகளை மறுத்த காவல்துறை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

"வெட கரன அபே விருவா" பாடல்: சமூக ஊடக அறிக்கைகளை மறுத்த காவல்துறை!


"வெட  கரன அபே விருவா" பாடலை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை காவல்துறை மறுத்துள்ளது.


"வெட  கரன அபே விருவா" எனும் பாடலை தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக வலைதளங்களில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.


சமீப காலங்களில் மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 2019 ஜனாதிபதித் தேர்தல் தீம் பாடலை எரிவாயு வரிசைகளிலும், எரிபொருள் வரிசைகளிலும் பாடி மகிழ்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.


எவ்வாறாயினும், இந்த பாடலை தவறாகப் பயன்படுத்தி ஜனாதிபதியை அவமதிக்கும் நோக்கத்தில் செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவ்வாறான அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பொலிஸார் மறுத்துள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.