பல கோவிட் கட்டுப்பாடுகளை நீக்கிய சவூதி அரேபிய அரசு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல கோவிட் கட்டுப்பாடுகளை நீக்கிய சவூதி அரேபிய அரசு!


சவூதி அரேபியா நேற்று (05) சனிக்கிழமையன்று பொது இடங்களில் சமூக இடைவெளி பேணுதல் மற்றும் தடுப்பூசி போடப்பட்ட வருகைக்கான தனிமைப்படுத்தல், உம்ரா மற்றும் ஹஜ் யாத்ரீகர்களின் வருகையை எளிதாக்கும் நகர்வுகள் உள்ளிட்ட பெரும்பாலான கோவிட் கட்டுப்பாடுகளை நீக்குவதாகக் கூறியது.


பள்ளிவாயல்கள் உட்பட அனைத்து திறந்த மற்றும் மூடிய இடங்களிலும் சமூக இடைவெளி பேணும் நடவடிக்கைகளை இடைநிறுத்துவது இந்த முடிவில் அடங்கும் என்று உத்தியோகபூர்வ சவூதி பத்திரிகை நிறுவனம் ஒன்று உள்துறை அமைச்சக ஆதாரத்தை மேற்கோளிட்டுள்ளது.


மேலும் நேற்று சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்த முடிவின்படி, மூடப்பட்ட இடங்களில் மட்டுமே முகக்கவசம் தேவைப்படும்.


அதேநேரம், மக்காவில் உள்ள பெரிய பள்ளிவாயலில் தொழுகை நடத்த அனுமதி பெறவோ, நியமனம் பெறவோ தேவையில்லை என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்தது.


"தவக்கல்னா செயலியில் தமது சுகாதார நிலையைக் காண்பிப்பது மாத்திரமே இரண்டு புனித பள்ளிவாயல்களுக்குள் நுழைவதற்கு ஒரே முன்நிபந்தனை" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மக்கா மற்றும் மதீனாவில் உள்ள இஸ்லாமியர்களின் இரண்டு புனிதமான இடங்களின் தாயகமான சவூதி இராஜ்ஜியம், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் இராஜ்யத்திற்கு வருவதற்கு முன்பு எதிர்மறையான PCR அல்லது ராபிட் ஆன்டிஜென் பரிசோதனை வழங்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது.


இந்நிலையில், கோவிட் தொற்றுநோய் இஸ்லாமிய யாத்திரைகளை பெரிதும் சீர்குலைத்துள்ளது, மேலும் அவை பொதுவாக இராஜ்யத்திற்கு முக்கிய வருவாய் ஈட்டுகின்றன, ஆண்டுதோறும் சுமார் $12 பில்லியன் ஈட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.