நாளை முதல் மக்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல் - காரணம் இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் மக்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல் - காரணம் இது தான்!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமக்கு போதிய டீசல் கையிருப்பை வழங்க அதிகாரிகள் தவறினால், நாளை பேருந்து சேவையில் இருந்து விலகுவோம் என தனியார் பேருந்து சங்கத்தினர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நிதியமைச்சர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இதற்கமைய கனியவள கூட்டுதாபனத்தின் விலையின் கீழ் இவ்வாறு பொது போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளுக்கு டீசல் வழங்கப்படவுள்ளது.

இதுதொடர்பான மதிப்பீட்டு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.