அனைத்து எரிவாயு விநியோகங்களும் இடைநிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்து எரிவாயு விநியோகங்களும் இடைநிறுத்தம்!


கையிருப்பு கிடைக்காமையால் லிட்ரோ மற்றும் லாப்ஃஸ் எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தம் செய்துள்ளதாக நிறுவனங்களின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

எரிவாயு கப்பல்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்த முடியாதுள்ளது.

இதனால், எரிவாயு கிடைக்காமையால் விநியோகத்தை இடைநிறுத்த உள்ளதாக லிட்ரோ மற்றும் லாப்ஃஸ் எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

டொலர் நெருக்கடியால், நாணயக் கடிதங்களை விடுவிக்க முடியாமையால், 3,500 மெற்றிக் டன் எரிவாயு தாங்கிய கப்பலுக்கு கொடுப்பனவை செலுத்த முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாணயக் கடிதங்களைத் திறக்க முடியாமையால், லாப்ஃஸ் நிறுவனம் சில தினங்களுக்கு முன்னர் சமையல் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தி இருந்தது.

இந்நிலையில், கையிருப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அத்தியாவசிய பொருளாதார நடவடிக்கைகளுக்கும் எரிவாயு விநியோகிப்பதை இடைநிறுத்தி வேண்டி ஏற்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.