கேஸினை அதிக விலையில் விற்றால் தகவல் தாருங்கள்! -லிட்ரோ நிறுவனம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கேஸினை அதிக விலையில் விற்றால் தகவல் தாருங்கள்! -லிட்ரோ நிறுவனம்


லிட்ரோ சமையல் எரிவாயு விநியோக முகவர்கள் 06 பேரினை லிட்ரோ நிறுவனம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியது.  


சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகளின் போது அவர்களால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் மோசடிகளை கருத்தில் கொண்டு இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் செயற்பட்ட 6 முகவர்களே இவ்வாறு இடை நிறுத்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் சாரங்க விஜேசிங்க குறிப்பிட்டார். 


இந்த முகவர்கள் 06 பேரும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை உரிய விலைக்கு மேலதிகமாக கூடிய விலையில் விற்பனை செய்தமை தொடர்பில் ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றதை அடுத்து இவ்வாறு இடை நிறுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.


இந்நிலையில், லிட்ரோ சமையல் எரிவாயுவை எவரேனும் கூடிய விலையில் விற்பனை செய்தால், 0112 505 808 எனும் தொலைபேசி இலக்கம் அல்லது 1311 எனும் துரித அழைப்பு இலக்கத்துக்கு அழைத்து தகவல் தருமாறு  லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.