இந்தியாவிடம் மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன் எல்லை வசதியை கோரியது இலங்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்தியாவிடம் மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன் எல்லை வசதியை கோரியது இலங்கை!


அத்தியாவசியமான பொருட்கள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து இலங்கை மேலதிகமாக ஒரு பில்லியன்  டொலர் கடன் எல்லை வசதியை (Credit Line) கோரியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ளன.


2020 ஜனவரியில் இருந்து இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 70% குறைந்துள்ளது.


இதனால் அத்தியாவசிய உணவு மற்றும் எரிபொருள் இறக்குமதிக்குகட்டணம் செலுத்துவதில் இலங்கை பாரிய நெருக்கடியை எதிர்கொண்டதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.


இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை உலக நாடுகளின் உதவியை நாடிவருகிறது.


இதேவேளை, முன்னதாக இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் ஒரு பில்லியன் டொலர் குறுகிய கால சலுகைக் கடனுக்கான ஒப்பந்தம் கடந்த 17 ஆம்திகதி புது டெல்லியில் கைச்சாத்திடப்பட்டது.


இந்திய அரச வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் பிரதி பொது முகாமையாளர் ஷிரி புஷ்கார் மற்றும் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.


உணவு, மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்த ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையிலேயே, இலங்கை மேலும் ஒரு பில்லியன் டொலரை இந்தியாவிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.