ரஷ்யாவுக்கான அனைத்து விமானங்களையும் இடைநிறுத்திய ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரஷ்யாவுக்கான அனைத்து விமானங்களையும் இடைநிறுத்திய ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ்!


ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளையும் கடந்த மார்ச் 26ஆம் திகதி இரவு முதல் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதன் புதிய தலைமை வர்த்தக அதிகாரியாக ரிச்சர்ட் நட்டில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.


கடந்த பருவத்தில் இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக ரஷ்யா இருந்தது.


ரிச்சர்ட் நட்டில் நிறுவனத்தின் இந்த முடிவு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு மாத்திரமன்றி சுற்றுலாத்துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


சில செய்திகளின்படி, ரஷ்ய - உக்ரைன் போருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த விமான இடைநிறுத்த முடிவு எடுக்கப்பட்டது.


ரிச்சர்ட் நட்டில் பிரித்தானிய பிரஜை எனவும், பிரித்தானிய அரசாங்கம் உக்ரைனுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.