500 சதவீதம் வரை உயர்த்தப்படவுள்ள மின் கட்டணம்??

advertise here on top
Join YazhNews WhatsApp Community

500 சதவீதம் வரை உயர்த்தப்படவுள்ள மின் கட்டணம்??


இலங்கை மின்சார சபையின் பிரேரணையின் பிரகாரம் மின் கட்டணத்தை 500% அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்றார். 

“பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பல்புகள் மற்றும் மின்விசிறிகளை உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும், அவற்றைப் பயன்படுத்த முடியாது. அத்தகைய சூழ்நிலையில் நாடு வீழ்ந்துள்ளது” என்றார்.

 இரண்டு வருடங்களாக நாட்டைப் பீடித்துள்ள கொரோனா வைரஸ் தொற்று மற்றும் உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நிலவும் மோதல்களின் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார். 

எவ்வாறாயினும், மின் கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) முன்னதாக தெரிவித்திருந்தது. இது தொடர்பாக CEB யிடமிருந்து பெறப்பட்ட தேவையான தரவுகளை மதிப்பாய்வு செய்த பின்னரே விலை உயர்வு குறித்து முடிவு செய்யப்படும் என்று PUCSL தெரிவித்துள்ளது. 

மீளாய்வு செயல்முறைக்கு நீண்ட காலம் தேவைப்படும் என்று ஆணையம் மேலும் கூறியது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.