வரிசையில் காத்திருந்து எரிபொருள் பெற்ற மேலும் ஒரு நபர் உயிரிழந்தார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வரிசையில் காத்திருந்து எரிபொருள் பெற்ற மேலும் ஒரு நபர் உயிரிழந்தார்!

மீரிகம, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்று திரும்புவதற்கு தயாராகிக்கொண்டிருந்த நபர் ஒருவர் தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மீரிகம காவல்துறையினர் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியில் வந்த குறித்த நபர் மூன்று கேன்களுக்கு எரிபொருளை பெற்றதுடன், அதில் இரண்டு கேன்களை முச்சக்கரவண்டியில் வைத்துவிட்டு மூன்றாவது கேனை எடுப்பதற்காக சென்றுள்ளார். இவ்வாறு மூன்றாவது கேனை எடுத்துச் செல்லும்போது அவர் கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து, அங்குப் பாதுகாப்புக் கடமையில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அவரை மீட்டு மீரிகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் மீரிகம பகுதியைச் சேர்ந்த 76 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை நேற்று (20) கடவத்தையில் அமைந்துள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு வயோதிபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கண்டி, யட்டிநுவர வீதியில் நேற்றுமுன்தினம் (19) மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்றிருந்த 71 வயதுடைய நபர் ஒருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.