ரஷ்யாவிடம் இருந்து $300 மில்லியன் கடன் கோரியுள்ள இலங்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரஷ்யாவிடம் இருந்து $300 மில்லியன் கடன் கோரியுள்ள இலங்கை!


ரஷ்யாவிடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாக கோரியுள்ளது. 

மசகு எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்காக இவ்வாறு கடன் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எரிபொருள் இறக்குமதிக்கு செலுத்துவதற்கு இலங்கையிடம் போதுமான அமெரிக்க டொலர்கள் இல்லை.

அண்மையில், பெட்ரோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களின் புதிய கடன் வரியை (LOC) இந்தியா வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்) 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.