டொலர் ஒன்றின் பெறுமதி ரூ. 240 ஐ அடையும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டொலர் ஒன்றின் பெறுமதி ரூ. 240 ஐ அடையும்!


டொலரின் பெறுமதி சுதந்திரமாக மாறுவதற்கு இடமளித்தால் டொலர் ஒன்றின் பெறுமதி  240 ரூபாவாக இருக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன் தொகை சுமார் 1400 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வட்டி விகிதங்கள் உயரும் என்று கூறிய அவர், அரசாங்கத்தால் வழங்கப்படும் திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் மீதான வட்டி விகிதங்கள் மேலும் 400 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அவர் நிலைமையை அறிந்திருப்பதாகவும், மாற்று விகிதங்கள், வரி அதிகரிப்பு மற்றும் ஊக்கக் குறைப்பு போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களிடமிருந்து நிதி உதவியைப் பெறுவதாகவும் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.