குப்பைகளை அகற்ற முடியாமல் பாதை ஓரங்களில் சேரும் குப்பைகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குப்பைகளை அகற்ற முடியாமல் பாதை ஓரங்களில் சேரும் குப்பைகள்!

மேல்மாகாணத்தில் உள்ள பல உள்ளுராட்சி மன்றங்கள் குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களுக்கு போதிய எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால் குப்பைகளை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வாகனங்களுக்கு எரிபொருள் கிடைக்காதமையினால் குப்பை அள்ளும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்து நிற்பதால் குப்பைகளை சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மேல்மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபையானது நாளாந்தம் சுமார் 500 மெற்றிக் தொன் குப்பைகளை சேகரிக்கிறது மற்றும் அதனை அகற்றுவதற்கு சுமார் 80 லொறிகளை ஈடுபடுத்துகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.