14 மணி நேர நீர் வெட்டு -மார்ச் 05

advertise here on top
Join YazhNews WhatsApp Community

14 மணி நேர நீர் வெட்டு -மார்ச் 05

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 08 மணி முதல் கொழும்பின் பல பகுதிகளில் 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய விநியோக வலையமைப்பை மேம்படுத்தும் பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைபடும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, சனிக்கிழமை (05) இரவு 08 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (06) காலை 10 மணி வரை 14 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு 7, 8, 10, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வள சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு 02, 03 மற்றும் 11 பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் வழங்கப்படவுள்ளது (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.