இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியின் சிறந்த வீரர் யோகேந்திரன் டக்சன் புஸ்லாஸ் (Yogendran Duckson Puslas) உயிரிழந்துள்ளார்.
மன்னாரினை சேர்ந்த இவர் நேற்று (26) மாலைதீவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழக வீரரும், இலங்கை கால்பந்தாட்ட அணியின் வீரருமாகிய டக்சனின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.