CCTV: துப்பாக்கி மற்றும் வாள்களுடன் சென்று மொத்த வியாபார நிலையம் கொள்ளை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CCTV: துப்பாக்கி மற்றும் வாள்களுடன் சென்று மொத்த வியாபார நிலையம் கொள்ளை!


கொள்ளையர்கள் துப்பாக்கிகள் மற்றும் வாள்களுடன் மொத்த வியாபார நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தனமல்வில - வெல்லவாய வீதியில் தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலஹருவ சந்தியில் அமைந்துள்ள மொத்த காய்கறி விற்பனை நிலையத்தினுள்ளேயே  கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர்.

துப்பாக்கி மற்றும் வாள்களுடன் கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள், உரிமையாளரை மிரட்டி பணம் மற்றும் உரிமையாளர் அணிந்து இருந்த  தங்க செயினை  கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று கொள்ளையர்களால் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் கடையில் இருந்த ஐந்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் கடை உரிமையாளர் அணிந்திருந்த தங்க நகையை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் தனமல்வில பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.