இரண்டு ஆண்டுகளுக்கு பின் பிணையில் விடுதலையானார் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரண்டு ஆண்டுகளுக்கு பின் பிணையில் விடுதலையானார் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்!


சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் இன்றையதினம் (09) அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2020 ஏப்ரலில், கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை, பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த திங்கட்கிழமை (07) எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் அவரை பிணையில் விடுவிக்குமாறு, புத்தளம் மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கடந்த 2020 ஏப்ரல் 14ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்தாரிகளுக்கு உதவியதாக தெரிவிக்கப்பட்டு,  பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் CID யினரால் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 10 மாதங்களுக்கு பின்னர், அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.