டியூஷன் வகுப்பு கழிவறையின் கமெரா பொருத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் வெளியான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டியூஷன் வகுப்பு கழிவறையின் கமெரா பொருத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் வெளியான தகவல்!


கம்பஹாவில் உள்ள பிரபல டியூஷன் வகுப்பு ஒன்றின் கழிவறையில் கமெரா பொருத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், சம்பவ இடத்திற்கு கமெராவை பொருத்தியவர் யார் என்பது குறித்த சரியான அடையாளம் இதுவரை வெளியாகவில்லை. 

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த டியூஷன் வகுப்புக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்தகழிவறையில் இருந்த கமெரா ஒன்றினை கண்டெடுத்துள்ளனர்.

மேலும் அந்த கமெரா காகிதத்தில் சுற்றப்பட்டு கழிவறையில் உள்ள ஜன்னலில் வைக்கப்பட்டிருந்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன. 

இதேவேளை, இச்சம்பவம் காரணமாக குறித்த கல்வி வகுப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

இந்த கட்டிடம் பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் இவ்விடயம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.