
களனி ரயில் பாலத்தின் கீழ் பொருத்தப்பட்டிருந்த 56,000 ரூபா பெறுமதியான சமிக்ஞை இணைப்பு தந்திகளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
42 மற்றும் 48 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.