14 வயது சிறுவன் மாயம்; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

14 வயது சிறுவன் மாயம்; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!


நீர்கொழும்பு, கொச்சிக்கடை - ஒப்பேரிய
 பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவரை கண்டறிவதற்கு காவல்துறை பொது மக்களின் உதவியை கோரியுள்ளது.

இந்த சிறுவன் கடந்த மாதம் 22ஆம் திகதி தனது வீட்டிற்கு அருகில் உள்ள தேவாலயத்துக்கு நிகழ்வொன்றுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை என காவல்துறையில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

மெரின் ஷ்டெபான் என்ற பெயரையுடைய 14 வயதான குறித்த சிறுவன், 5 அடி உயரம் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் காணாமல்போன சந்தர்ப்பத்தில் பச்சை நிற டீ - ஷர்ட் மற்றும் நீல நிற டெனிம் காற்சட்டை மற்றும் வெள்ளை மற்றும் கருப்பு காலணிகளை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் சற்று மனவளர்ச்சி சிக்கலை கொண்டவர் என்றும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

இந்த சிறுவன் தொடர்பில் தகவல்கள் தெரிந்திருப்பின் 071 85 91 631 என்ற கொச்சிக்கடை காவல்நிலைய பொறுப்பதிகாரியின் இலக்கத்துக்கோ, 031 22 77 222 அல்லது 031 22 76 338 ஆகிய இலக்கங்களை தொடர்புகொண்டு கொச்சிக்கடை காவல்நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு பொது மக்களிடம் காவல்துறையினர் கோரியுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.