மகனை கடத்திய தந்தை துப்பாக்கிச் சூட்டில் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மகனை கடத்திய தந்தை துப்பாக்கிச் சூட்டில் பலி!


ஹொரணை - கந்தன பகுதியில் பெண்ணொருவரிடமிருந்து சிறுவன் ஒருவனை கடத்திச் சென்ற பாதாள உலக்குழு உறுப்பினரென அறியப்படும் 'ஹொரண நீலக்க' என்ற நபர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

ஹொரணை - பெல்லப்பிட்டிய பகுதியில் சந்தேகநபருக்கும், காவல்துறையினருக்கும் இடையே இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் பலியானதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொலைகள் உட்பட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஹொரண நீலக்க, மாமியாரின் பொறுப்பில் இருந்த 7 வயதான தனது மகனை கடத்திச் சென்றுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது மனைவியின் கைகால்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாகவும் அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபரை கைது செய்ய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், நேற்று (16) இரவு குறித்த நபர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, தனது மகனை கடத்திச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.