உலகின் மிகப்பெரிய விமானம் ரஷ்ய தாக்குதலில் சாம்பலானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலகின் மிகப்பெரிய விமானம் ரஷ்ய தாக்குதலில் சாம்பலானது!


உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான உக்ரைனில் தயாரிக்கப்பட்ட அன்டோனோவ் AN-225 மிரியா (Antonov AN-225 Mriya), கிய்வ் அருகே உள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் ரஷ்ய தாக்குதலில் எரிந்து சாம்பலானதாக உக்ரேனிய அரசு ஆயுத தயாரிப்பு நிறுவனமான உக்ரோபோரோன்ப்ரோம் இன்று (27) தெரிவித்துள்ளது.


"ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் உக்ரேனிய விமானத்தின் முதன்மையான அன்டோனோவ்-225 மிரியாவை அழித்தார்கள். இது கியிவ் அருகே ஹோஸ்டோமலில் உள்ள அன்டோனோவ் விமான நிலையத்தில் நடந்தது." என்று உக்ரோபோரோன்ப்ரோம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


மேலும் தகர்க்கப்பட்ட விமான மறுசீரமைப்புக்கு $3 பில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் என்றும் அதற்கு நீண்ட காலம் தேவை என்றும் அது கூறியது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.