அமெரிக்க பெண் பயணியை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற முச்சக்கரவண்டி சாரதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமெரிக்க பெண் பயணியை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற முச்சக்கரவண்டி சாரதி!


வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியான 40 வயது பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற முச்சக்கரவண்டி சாரதியை எல்ல பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.


எல்ல நகரிலிருந்து கரந்தகொல்லை உல்லாச விடுதிக்குச் செல்வதற்கு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், ஓட்டோ ஒன்றில் சென்றபோதே, ஓட்டோ சாரதி மனித சந்தடி இல்லாத இடத்தில் முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு, இப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்குப்படுத்த முயன்றுள்ளார்.


முச்சக்கரவண்டி சாரதியின் பிடியிலிருந்த தப்பி ஓடிய அமெரிக்க பெண் எல்ல பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.


இந்தப் புகாரையடுத்து, எல்ல பொலிஸார் விரைந்து குறிப்பிட்ட முச்சக்கரவண்டி சாரதியைக் கைதுசெய்தனர்.


கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி விசாரணையின் பின்னர் பண்டாரவளை மஜிஸ்ரேட நீதிமன்றத்தில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபேந்திர வாசனா அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.