மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருளின் விலை?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருளின் விலை?


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு ரூபாவில் ஏற்பட்ட நட்டம் காரணமாக டொலர்களைப் பெறுவதற்கு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.


இந்நிலையில் டொலர் பற்றாக்குறையினால் எதிர்காலத்தில் நாட்டிற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதில் கூட்டுத்தாபனம் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலைமையை கருத்தில் கொண்டு எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு அல்லது எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


மேலும் எரிபொருள் விலையை அப்படியே பேணுவதன் மூலம் தமக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் CPC தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.