போதை மாத்திரை விற்பனை செய்த மேலுமொரு போலி வைத்தியர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போதை மாத்திரை விற்பனை செய்த மேலுமொரு போலி வைத்தியர் கைது!


வைத்தியராக தன்னை அடையாளப்படுத்தி ஹட்டன் கொட்டகலை கொமர்ஷல் பிரதேசத்தில் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தலவாக்கலை விசேட அதிரடிப் படையினரால் இன்று பிற்பகல் குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபர் ஹட்டன் கொட்டகலை கொமர்ஷல் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்தியராக தன்னை அடையாளப்படுத்தி நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதற்கிடையில் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்துள்ளார்.


இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 338 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், போதை மாத்திரைகளை வாங்க வந்திருந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் பணி புரிந்தவர் என தெரிவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக திம்புள்ளை பதன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.