மத்துகம ஷான் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரின் இரு அடியாட்கள் இந்தத் தாக்குதலை நடத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மத்துகம, பாலிகா வீதி பகுதியில் உள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் நேற்று இரவு 9.05 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அப்போது வீட்டில் இருந்த பெண் வீட்டு நாய்க்கு இரவு உணவு கொடுக்க வெளியே வந்துள்ளார்.
வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் அவர் துப்பாக்கி சூடு நடத்தியவர்களை பார்த்ததும் உடனடியாக வீட்டிற்குள் ஓடியதும் பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், சந்தேகநபர் ஒருவர் T-56 ரக துப்பாக்கியை எடுத்துச் சென்ற பெண்ணின் தலையில் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அப்போது, குறித்த பெண்ணின் கணவர் தனது இளம் மகனுடன் வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று கதவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டதாக தகவல் கிடைத்தது.
துப்பாக்கிதாரிகள் அறைக்குள் நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
மற்றொரு குழந்தை வீட்டில் வேறு எங்கோ ஒரு பகுதியில் மறைந்திருந்தது.
மேலும் இந்த வீட்டில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டின் உரிமையாளர் அசங்க என்பவர் இவ்வாறு ஏதாவது நடக்கலாம் என்ற சந்தேகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தியுள்ளார்.
நேற்றிரவு இறந்த மனைவியையும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பெண் 38 வயதான மூன்று பிள்ளைகளின் தாயாவார்.
கொலையின் பின்னணியில் மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த ஷான் என்பவர் ஈடுபட்டுள்ளதாகவும், உயிரிழந்த பெண்ணின் கணவர் அவரது உறவினர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி ஷான் மத்துகமவின் மனைவிக்கு சொந்தமான மத்துகம பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு வந்து வாளால் தாக்கிய நபருக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. (யாழ் நியூஸ்)