நாளையுடன் முடிவடையும் விண்ணப்ப அவகாசம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளையுடன் முடிவடையும் விண்ணப்ப அவகாசம்!


2021 (2022) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற விரும்பும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் நாளையுடன் (17) முடிவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.


முன்னதாக, பெப்ரவரி 3 மற்றும் 10 ஆம் திகதிகளில் இரண்டு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், நாளையுடன் வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ திறன்பேசி செயலியான DoE க்குச் சென்று விண்ணப்பத்தை ஒன்லைனில் சமர்ப்பிக்கும் முன் உரிய வழிமுறைகளை கவனமாக வாசிக்குமாறு பரீட்சார்த்திகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.