advertise here on top
Join yazhnews Whatsapp Community

சண்முகா பாடசாலையில் முஸ்லிம் மாணவிகளின் ஆடையுரிமை மீறலை விசாரிக்க கிழக்கின் கேடயம் ஜனாதிபதியிடம் கோரல்!


ஜனாதிபதியின் 74 வது சுதந்திரதின உரையில் இந்தநாட்டில் தனிநபர்களினதும் இனம் மதம் ரீதியிலான உரிமைகளை இந்த அரசாங்கம் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் பாதுகாத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார் 


ஆனால் திருகோணமலை சண்முகா பாடசாலையில் முஸ்லிம் மாணவிகள் தமது பர்தாவினையும் ஜீன்ஸ்னையும் கழற்றி வைத்துவிட்டே வகுப்பறைகளுக்கு அனுப்பப்படுவதாக திருகோணமலை கள விஜயத்தின்போது அறிந்துகொண்டதாகவும் இதுதொடர்பில் உண்மைத்தன்மையினை கண்டறிந்து தவறு இழைத்தவர்களுக்கு உரியநடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடுமாறும் கிழக்கின் கேடயம் சார்பில் தலைவர் எஸ் எம் சபீஸ் கையெழுத்திட்ட  எழுத்துமூல கடிதம் அனுப்பப்பட்டுள்ளது 


இந்த பாடசாலைக்கு அங்கு காணப்படும் ஏனைய பாடசாலைகளையும்விட அதிகளவான பௌதிகவளங்கள் அதிகாரத்தில் உள்ளவர்களால் வழங்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


-நூருள் ஹுதா உமர்


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.