யாழில் பதட்டநிலை; ஒருவர் மீது துப்பாக்கி சூடு; ஐவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழில் பதட்டநிலை; ஒருவர் மீது துப்பாக்கி சூடு; ஐவர் கைது!


யாழ். கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி பகுதியில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபடுவோர் மீது STF உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


யாழ். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், வரணி பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த உத்தியோகத்தர்கள் குழுவொன்று சட்டவிரோத மதுபான வியாபாரி ஒருவரை கைது செய்வதற்காக சென்றிருந்த விசேட அதிரடிப்படையினர் குழுவொன்றை மறித்துள்ளனர்.


இதன்பின்னர், மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர்களில் ஒருவர் சிறு காயங்களுடன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


மேலும் கொடிகாமம் பொலிஸார் சந்தேக நபர்கள் ஐவரை கைது செய்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.