பால்மாவின் தீங்கு குறித்து மக்கள் அறிந்தால் வரிசைகள் குறையும்! -திலும் அமுனுகம

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பால்மாவின் தீங்கு குறித்து மக்கள் அறிந்தால் வரிசைகள் குறையும்! -திலும் அமுனுகம


பால்மாவில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் தொடர்பில் பொதுமக்களுக்குத் தெரியுமா என்று கேள்வி எழுப்பிய போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பால்மாவைப் பயன்படுத்துவது ஒரு போதையாக மாறிவிட்டது என்றும் தெரிவித்தார்.


கண்டியில் இன்று (08) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.


பால்மாவிலுள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்கள் குறித்து பொதுமக்கள் அறிந்தால் பால்மா பொதிகளை கொள்வனவு செய்வதற்கான வரிசைகள் குறையும் எனவும் பொதுமக்களுக்கு திரவப் பாலில் பல தெரிவுகள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.


பல மாற்று வழிகள் இருக்கும் போது, பால்மா தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் மீது குற்றஞ்சுமத்தி மக்கள் வரிசையில் நிற்பது குறித்து ஊடகவியலாளர்கள் கவனம் செலுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.


உள்ளூர் பொருட்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதாகக் கூறிய அவர், சவால்கள் மற்றும் பிரச்சினைகள் எவையாக இருந்தாலும், உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதில் ஜனாதிபதி தொடர்ந்து கவனம் செலுத்துவார் என்றும் குறிப்பிட்டார்.


இவ்வாறான தீர்மானங்களை மக்கள் விரும்பமாட்டார்கள் எனவும், தற்காலிகமாக அவை பிரபலமடையாது எனவும் குறிப்பிட்ட அவர், இவ்வாறான தீர்மானங்களின் பின்னணியில் உள்ள காரணங்களை எதிர்காலத்தில் பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.