பொரளை கைக்குண்டு விவகாரம்; ஒருவரை தவிர அனைவரும் விடுவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொரளை கைக்குண்டு விவகாரம்; ஒருவரை தவிர அனைவரும் விடுவிப்பு!


பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அத்தேவாலய ஊழியரை விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அவ்வாலயத்துடன் தொடர்புடைய 29, 25, 41, 55 வயதுடைய 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில்,  அதில் மூவர் கடந்த வாரம் புதன்கிழமை (02) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 55 வயதான பிரான்சிஸ் முனீந்திரன் மற்றும் அவர் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய கைதான பிரதான சந்தேகநபர் என தெரிவிக்கப்படும் ஓய்வு பெற்ற வைத்தியர் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த ஆலயத்தின் பணியாளரான பிரான்சிஸ் முனீந்திரனை பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடந்த வெள்ளிக்கிழமை நேரில் சென்று சந்தித்து நலன் விசாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.