இலங்கை அணிக்கு அபராதம் விதிப்பு! நிஸ்ஸங்கவிற்கு எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை அணிக்கு அபராதம் விதிப்பு! நிஸ்ஸங்கவிற்கு எச்சரிக்கை!


அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியின் போது குறைந்த வேகத்தில் ஓவர்களை வீசியமை தொடர்பில் இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


போட்டி தொகையில் 20 வீதத்தை அபராத தொகையாக சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்துள்ளது.


அத்துடன் சர்வதேச போட்டியில் தகாத மொழிப் பிரயோகத்தை பயன்படுத்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நன்னடத்தை விதி 2.3 ஐ மீறியதாக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


துடுப்பெடுத்தாடும்போது, பந்தை தவறவிட்டதை அடுத்து அவர் தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டமை ஸ்டம்பில் இருந்த ஒலிவாங்கியில் பதிவாகி இருந்தது.


இது அவரது ஒழுக்கம் சார்ந்த விடயத்தில் ஒரு பாதக புள்ளியை சேர்த்துள்ளதுடன் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.